
தோழர் ஒருவரிடம் கொடுத்தனுப்பி, கிட்டத்தட்ட ஒன்றை மாதங்களுக்குப்பின் என் கைகளுக்குக் கிடைத்தது -கோத்தகிரியைச் சேர்ந்த தோழர் தவமுதல்வனின் ''பச்சை ரத்தம்'' ஆவணப்படம். இன்று பார்த்தேன்.. ஆவணப்படமுயற்சியே மிகக் குறைவாகிப் போன( ஆவணப்படத்திற்கு நிறைய உழைக்கணும்... மெட்டீரியல் தேடி அலையணும்... குறும்படம்னா.... ஒரு இடத்தில் உட்கார்ந்து - கதை தயார் பண்ணி - படமும் எடுத்து, சீக்கரமே ஒரு (குறும்பட) இயக்குநர் ஆகிவிட முடியும்) இன்றைய சூழலில்... இவரின் முயற்சி உண்மையிலுமே வரவேற்கத்தக்கதே... மலையகத் தமிழர்கள் குறித்த ஆவணம்...முன்பகுதியில் - வேலைக்(அடிமைக்)கூலிகளாக இலங்கை அழைத்துச்செல்லப்பட்ட மலையக தோட்டத்தொழிலாளர்கள் பின் அங்கிருந்து..இனப்பாகுபாடினால் துரத்தியடிக்கப்பட்டு - அவர்கள் தமிழகத்தில் ஊட்டி, வால்பாறை, தேனி போன்ற பகுதிகளில் தேயிலை, காப்பித் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டதும்...இன்றுவரை - கொத்தடிமைகள் போல நடததப்படுவதும் குறித்தான பதிவு... நாம் தினமும் அருந்துகிற காப்பி, தேநீரில்... அந்தத்தொழிலாளிகளின் ரத்தத் துளியும் கலந்திருக்கின்றன.... என்பதாக 'பச்சைரத்தம்' பேசுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக