பார்க்கின்ற பொருளையெல்லாம்
தாள்களில் வரைந்துகாட்டும்
சின்னவனை மெச்சாமல்
யாரோ வரைந்த
ஓவியத்தில் இலயித்திருக்கிறேன்,
கண்மூடி.
“இன்னைக்காச்சும்
நேரமே வாங்கப்பா” என்கிற
பெரியவனின்
தொலைபேசிக் கட்டளையைக்கூட
கவனத்தில் கொள்ளாமல்
இலக்கியம், அரசியல் பேசி
இரவு நெடுநேரம் கழித்து
வீடு திரும்புகிறேன்
சோர்வுடன்.
“ஞாயிற்றுக்கிழமைகளிளாவது
எங்கேயாவது வெளியே
கூட்டிட்டுப் போங்களேன்” எனும்
மனைவியின் ஆசையிலும்
மண்ணள்ளிப்போட்டு
சுற்றித்திரிகிறேன்
நிறைய நேரம்.
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
வாழ்க்கையை
வெளியே
வீட்டில் தொலைத்துவிட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக