நண்பர் விநாயகமூர்த்தி அழைத்ததனால் / திருப்பூர் மகளிர் மன்றம் நிகழ்விற்கு போகேவண்டியதாகப்போனது. ஆண்டுவிழா நிகழ்வு. பாட்டு, பேச்சு, நடனம் (நல்லவேளை சினிமாபாடல்கள் இல்லை) தனிநபர் நடிப்பு, கவிதை, ஓவியம், மற்றும் குறும்படம் என பலபோட்டிகள். என்னை அழைத்தது தனிநபர் நடிப்பு, மற்றும் குறும்படத்திற்கா ன தேர்வுக்குழு / நானும் விநாயகமூர்த்தியும். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக திருப்பூரில் இயங்கிவருகிற அமைப்பாம் மகளிர் மன்றம். எனது 10வதுவயதில் துவங்கியிருக்கவேண்டும். இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போதுதான் எனக்கு தெரிந்தது. எல்லாம் வெள்ளைவெள்ளையான பெண்கள்.(வெள்ளைக்காரிகள் அல்ல) கிட்டத்தட்ட சேட் பெண்களாக இருக்க வேண்டும்.(90 சதவீதம். 10 சதவீதம் மற்றபெண்கள்) ஆங்கிலம் முழுமையாகவும் போனால் போகிறதென தமிழும் கொஞ்சம்,,கொஞ்சம்… அந்த அமைப்பிலுள்ள 30பேரில் 20 பேர் வநதிருந்தனர். நடுவர்களாக 15பேர்.(என்னை உட்பட) பங்கேற்பாளர்கள் 20, 25 பேர். அப்புறம் காலிசேர்கள் தான். திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிற லேடீஸ் கிளப் மாதிரிதான் தோன்றியது. இப்படியான லேடீஸ்கிளப்பை இப்போதுதான் பார்க்கிறேன். ஒரே ஆட்டம், பாட்டு, கூத்துதான். ஒருசில பெண்களே எல்லா போட்டிகளிலும் பங்கெடுத்துக் கொண்டனர். நல்லவேளை… அமைப்பினர் யாரும் ஆடவுமில்லை. பாடவுமில்லை. (பின்ன… அவ்வளவு பெரிய உடம்ப வெச்சுட்டு ஆடிப்பாட முடியுமா என்ன..) வெள்ளைத்தோல் மட்டும்தான். மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை. ஆளுக்கொரு கைப்பை. விலையுயர்ந்த ஜிகினா புடவைகள்.. அது விலகுவது கூடதெரியாது நிகழ்ச்சி மதப்பில்( நார்த் இன்டியன்ஸ் அப்படித்தானே இழருப்பார்கள்…) இருந்தார்கள். பள்ளிமாணவிகள் தான் அதிக நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டனர். எந்த நிகழ்வையும் அமைப்பினர் கண்டதாகத் தெரியவில்லை. சம்பரதாயமான நிகழ்வுகள்.. போட்டிகள்… அதற்கு நடுவர்கள்… (நானும்தான்) எனக்கான முறை வந்தது… முன்னப்பின்ன செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரியும்..? எப்படி தீர்பெழுதுவதென்றே தெரியவில்லை. 5 தலைப்புகள். ஐந்தும் பெண்கள் சார்ந்ததே! பெண் தொலைக்காட்சிபார்ப்பதும், துவையல் அறைப்பதும், கணவன், அம்மா, மாமியார், நண்பர்கள்… பின்னமர… எப்படி வாகனம் ஊட்டுவது…. இப்படியான தலைப்புகள் தான். அதற்கு அவர்கள் நடித்துக்காட்டவேண்டும்…. அப்பா சாமி…. கொன்றெடுத்துவிட்டார்கள். தனிநபர் நடிப்பு என்பதுபோய்… எல்லாருமே ஒலிவாங்கியில் வசனங்களாக வாந்தியெடுத்தார்கள்…. (தொலைக்காட்சிகளின் தாக்கம்) இருப்பதில் சிறப்பு எனும் அடிப்படையில் தேர்வு செய்தோம். இறுதியாக பேசவந்த அந்த அமைப்பின் பொறுப்பாளர் … 32 வருடங்களாக பொதுசேவை செய்து வருகிறோம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு உதவிகள் செய்கிறோம்… சுனாமியால் இறந்தவர்களுக்கு செய்திருக்கிறோம். இலங்கைத்தமிழர்களுக்கு உதவியிருக்கிறோம்…. என்றெல்லாம் சொல்லிக் கொண்டேபோயினர். இந்த சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெணடகளின், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, எத்தனையோ பெண்களின் துயர்கூடதெரியாத இந்த மேட்டுக்குடி பெண்களின் டைம்பாஸை நினைத்து வருந்தினேன். தன் இனவிடுதலைக்காக களத்தில் நின்றுபோராடும் ஈழப்பெண்களையோ, உலகில் ஒவ்வொரு வினாடிகளிலும்… ஏமாற்றப்படுகிற… பாலியல்பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுகிற… விலைமகள்களாய் விற்க்கப்படுகிற… கொத்தடிமைகளாக இருக்கிற… எத்தனையோ பெண்களின் வலியோ, வேதனையோ தெரியாது வாழும் இப்படியான பெண்கள் அமைப்பின் மீது வருகிற கோபத்தை என்னவென்று சொல்ல..? கணத்த மனதுடனே நிகழ்ச்சி முடித்து வெளிவர முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக